தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழும்போது ஒவ்வொரு இரு ரக்அத்தின் இறுதியிலும், தஷஹ்ஹுத்' ஓதுங்கள். தன் இயலாமையை வெளிப்படுத்திப் பணிவுடனும் தாழ்மையுடனும் அமைதியாகவும் தொழுங்கள். தொழுது முடித்த பின், தம் இருகைகளையும் உள்ளங்கை முகத்தை நோக்கியவாறு இருக்க நெஞ்சுவரை உயர்த்தி தமது இரட்சகனிடத்தில் துஆச் செய்யுங்கள். (யாரப்பி, யாரப்பி) இரட்சகனே! இரட்சகனே!' என்று சொல்லி துஆச் செய்யுங்கள். இவ்வாறு செய்யாதவரின் தொழுகை (நன்மை, மற்றும் கூலியின் அடிப்படையில்) குறையுள்ள தொழுகையே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஃபழ்லுப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
(முஸ்னத் அஹ்மத்)
Comments
Post a Comment