தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

பிறருடைய உலக ஆதாயத்துக்காகத் தனது மறுமையை நஷ்டமடையச் செய்பவனே மனிதர்களில் மிகத் தீயவன். மற்றவர்களுக்கு உலக லாபங்கள் கிடைப்பதற்காக, அல்லாஹுதஆலாவை வெறுப்படையச் செய்யும் காரியத்தைச் செய்து, தன்னுடைய மறு உலக நன்மையை இழந்தவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பைஹகீ)

இந்தச் சமுதாயத்தின் மீது நான் அதிகமாகப் பயப்படுவது, நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றித்தான்'' (தன்னுடைய ஈமான் மற்றும் அமல் பற்றி கவலைப்படாமல் மார்க்க ஞானங்களைப் பேசுபவன்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பைஹகீ)

Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢