தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
ஒரு முஸ்லிம் தன் முஸ்லிம் சகோதரருக்காக அவர் இல்லாத பொழுது கேட்கும் துஆ ஒப்புக்கொள்ளப்படுகிறது. துஆச் செய்பவரின் தலைக்கு அருகில் ஒரு மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தன் சகோதரரின் நன்மைக்காக துஆச் செய்யும் பொழுதெல்லாம் அந்த மலக்கு ஆமீன்'' கூறுகிறார். மேலும் நீர் உமது சகோதரனுக்காக எந்த நலவை வேண்டுகிறீரோ, அதுபோன்ற நலவை அல்லாஹுதஆலா உமக்கும் தந்தருள்வானாக! (என்று துஆச் செய்பவரிடம் கூறுகிறார்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுவார்கள் என ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
(முஸ்லிம்)
Comments
Post a Comment