தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இறையச்சம்:
உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹானி
ஆதாரம்: அஹ்மத் 454
உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹானி
ஆதாரம்: அஹ்மத் 454
மண்ணறை வாழ்க்கையென்பது வாழ்க்கைப் பயணத்தில் அனைவரும் சந்தித்தாகவேண்டியதொன்றாகும். மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர் மரணித்தாலும் வெறும் வெள்ளைப் புடவையில் சுற்றப்பட்டுத்தான் அடக்கம் செய்யப்படுவார். கோடிக்கணக்கில் அவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் ஒரு ரூபாயைக் கூட அவர் கொண்டு செல்வதில்லை. அவர் கைவிரலிலிருக்கும் மோதிரத்தைக் கூட கழற்றி எடுத்து விடுவார்கள். இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது மனித வாழ்வின் அர்த்தம்தான் என்ன? எதற்காக இந்த வாழ்க்கை? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. சந்தோசத்தில் திளைத்துப் போன ஒருவனுக்கு, உறவுகளில் யாருக்காவது மரணம் அடைந்துவிட்டால் மறுகனமே வாழ்க்கை இருண்டு விடுகின்றது. கவலையும், சோகமும் அவனை வாட்டுகின்றது. ஆகவே மரணம் ஒருவரின் வாழ்வில் அபரிமிதமான தாக்கங்களையும், மாற்றங்களையும் சில நொடிகளிலேயே ஏற்படுத்திவிடுகின்றது. எனவேதான் நபியவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.
Comments
Post a Comment